என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மருத்துவ மாணவிக்கு தொல்லை
நீங்கள் தேடியது "மருத்துவ மாணவிக்கு தொல்லை"
சென்னை கே.கே.நகரில் மருத்துவ மாணவியை காதலிக்கும் படி மிரட்டிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி கே.கே. நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறார். இந்த மாணவியை அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த அருப்புக் கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து மாணவி புகார் அளித்தார். இதையடுத்து கல்லூரி டீன் காவலாளி கணேசனை கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு கணேசன் எழுதிய கடிதம் ஒன்று வந்தது. அதில் தான் உனக்காக 23-ந் தேதி மருத்துவ கல்லூரி வாசலில் காத்திருப்பேன்.
என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று நீ நேரில் வந்து கூற வேண்டும் என்று மிரட்டும் விதத்தில் எழுதி இருந்தார். இதுகுறித்து மாணவி தனது தந்தைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
அதேபோல் நேற்று காலை கல்லூரி முன்பு காத்து நின்ற கணேசனை மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் ரூபன், கணேசனை கைது செய்தார்.
விசாரணையில் கணேசன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி கடந்த 2012-ம் ஆண்டு முதல் கே.கே. நகர் மருத்துவ கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். திருமணம் ஆனவர். மனைவி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவி கே.கே. நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறார். இந்த மாணவியை அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த அருப்புக் கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து மாணவி புகார் அளித்தார். இதையடுத்து கல்லூரி டீன் காவலாளி கணேசனை கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு கணேசன் எழுதிய கடிதம் ஒன்று வந்தது. அதில் தான் உனக்காக 23-ந் தேதி மருத்துவ கல்லூரி வாசலில் காத்திருப்பேன்.
என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று நீ நேரில் வந்து கூற வேண்டும் என்று மிரட்டும் விதத்தில் எழுதி இருந்தார். இதுகுறித்து மாணவி தனது தந்தைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
அதேபோல் நேற்று காலை கல்லூரி முன்பு காத்து நின்ற கணேசனை மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் ரூபன், கணேசனை கைது செய்தார்.
விசாரணையில் கணேசன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி கடந்த 2012-ம் ஆண்டு முதல் கே.கே. நகர் மருத்துவ கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். திருமணம் ஆனவர். மனைவி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X